ஜாவர் சீதாராமன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து நாவல் வரிசையில் அவரின் 'நானே நான்' படித்திருக்கிறேன் மர்மக்கதை போன்று அருமையாக இருக்கும். ஏழை படும்பாடு எனும் திரைப்படத்தில் ஜாவர் என்ற பாத்திரத்தில் நடித்ததால் சீதாராமனுடன் ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது.
பத்தாயிரம் மைல் பயணம்
படித்தது : பத்தாயிரம் மைல் பயணம்ஆசிரியர்: வெ.இறையன்புபக்கங்கள்: 301பதிப்பகம்: நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்விலை: 300 ரூபாய்வகை: கட்டுரை ஆசிரியரைப் பற்றி:அரசுத்துறையில் பணி ஆற்றும் ஒருசிலர்,பணிசார்ந்தும் ,பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற போதும் தன்னால் இயன்ற அளவு மக்களுக்கும் , சமூகத்திற்கும் ஏதேனும் ஒருவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முன்னேற்றுவது என்பதை தன்பணியாகவே கருதி தொடர்கின்றர். அந்த வகையில் அவர்கள் வகிக்கும் பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்களாக , முன்னுதாரணமாக இருப்பவர்களாக , மக்கள் மனதில் உண்மையான நாயகர்களாகிறார்கள். பெயரிலேயே இறை... Continue Reading →
பாவை
மு.வ. என அவர் பெயரைச் சுருக்கலாம். அவரின் தமிழறிவை, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை சுருக்கிடமுடியாது. உலகம் சுற்றிய முதல் தமிழ் பேராசிரியர். அமெரிக்க பல்கலைக்கழத்தின் பிலிட் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பிசிராந்தையார்
புரட்சிக் கவிஞர் தன்' புரட்சிக் கவி ' கதையில் அருமையாக தன் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருப்பார் .'குடும்ப விளக்கு' கவிதையில் ஒரு சிறப்பான குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென காட்டியிருப்பார் .'அழகின் சிரிப்பு' இயற்கை, அழகான காடு, மலை ,அருவி கடல் , பறவைகள் ஒவ்வொன்றிலும் தன் சிந்தனைகளைப் புகுத்தி வர்ணித்திருப்பார்.
குறிஞ்சித்தேன்
மலைவாழ் மக்களின் அன்புறவான வாழ்வில் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக வர, வாழ்வியல் மாற, மூன்று தலைமுறையிலும் நடக்கும் மாற்றங்களை, மூன்று குடும்பங்களின் உறவு முறையில் நடக்கும் நிகழ்வுகள், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் என்று கதையை அருமையாக படைத்துள்ளார்.
இசை
திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்களின் படைப்பான 'இசை' சிறுகதை சொல்வனம் மின்னிதழில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை நாமும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். https://www.youtube.com/watch?v=2Kh5gXwd7Jw இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸை நிறுத்தய்யா!….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பி நேரா போனா நம்ம வீடு சார்…அஞ்சாம் நம்பர் வீடுங்க ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா... Continue Reading →
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்
'உலகநீதி'யின் இரண்டாம் செய்யுளில் உள்ள நாண்காவது நீதி 'நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்' என்பதாகும். சிறார்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமான சிறிய கதை.
வாய்ப்பாடு
தனக்கு வராத கணக்கை ஒரு அளவுகோலாய் பாவிக்கும் ஒரு மனிதனின் கதை இது. நம் வாழ்விலும் நமக்கு சவாலான விடயங்கள் ஒரு அளவுகோலாய் மாறிவிடுவது எத்தனை உண்மை? இக்கதையின் கடைசி வரிகளை படித்ததும் வாசகன் மனதில் தோன்றும் கேள்விகள் பல: விடை பிழை என்று தெரிந்தும் 'என்னைப்போல் ஒருவன்' எனும் கண்டெடுத்தலின் கொண்டாட்டமா இது?, விடை தெரியாமல் தான் அனுபவித்த வேதனையில் இருந்து மீழ இது ஒரு பிராயச்சித்தமா? "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பதின் மறு வடிவமா?
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்….
எனது மகளின் வளர்ப்பு கிளிக்கு எற்பட்ட ஒரு மனோதத்துவ தாக்கத்தை அடிப்படையாக வைத்து (உண்மை சம்பவம்) இக்கதையை புனைந்தேன். பறவைகளின் மத்தியில் நிலவும் சமுதாய அடுக்குகளை புரியவைக்கும் கதை இது.
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
( ஓவியம்:திரு.கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்பேர்ன், ஆஸ்திரேலியா ) ஒரு ஊரில் ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவன் பொய் சொல்லும் பழக்கம் உள்ளவன். அந்த ஊரில் எல்லாவித கெட்ட பழக்கங்களையும் உடைய ஒருவன்தான் அவனுக்கு நண்பன். அந்த கெட்டவன் செய்யும் அநியாயங்களில் இருந்து அவனைக் காப்பாற்ற இந்த பொய்யன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லி அவனைக் காப்பாற்றுவான். உண்மைக்கு மாறாக பல முறை... Continue Reading →
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
முகத்துக்குமுன் கூழைக்கும்பிடு போட்டு,முதுகுக்குப் பின் வாரித் தூற்றுபவரின் கதி என்னவாகும் என்பதனை விளக்கும் சிறுவர் கதை.
போகாத இடந்தனிலே
உலகநீதிபாடலில் அடுத்தது: 'போகாத இடந்தனிலே போக வேண்டாம்' இதை விளக்கும் கதையைப் பார்ப்போம்.
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தூக்குதண்டனை பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும் ஜனார்த்தனன் மனம் பட்டபாடு. இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின் குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது என குடும்பம் சார்ந்த குறிப்புகள் ஒருபுறம்.
The Secret
இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் , ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
உண்மையான அன்பும், பாசமும், தியாக குணமும் கொண்ட மாதாவை நாமும் மறக்காமல் இருப்போம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
'உலகநீதி ' எனும் நீதிநூலை இயற்றியவர் உலகநாதர் என்பவர் ஆவார். பதின்மூன்று ஆசிரியப்பாக்களில் எழுபது 'வேண்டாம் ' என்று விலக்கக் கூடியவற்றை கூறுகிறார். பொருள் விளக்கிக் கூற அவசியமில்லாத, எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் இயற்றியுள்ளார். இவர்காலம் 18ஆம் நூற்றாண்டு எனவும் 16ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். ஒவ்வொரு வரியையும் ஒரு கதை மூலம் விளக்க முற்படுகிறேன்.
கண்ணுக்குத் தெரியாத மனிதன்
ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார்.
எங்கிருந்தோ வந்தான்!
அவனை எழுப்பாதீர்; அமைதியாய் தூங்கட்டும்! ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்.
கிடை
சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே கேட்க தொடங்கும் மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக கேட்கும்.
தனியே சென்ற கோழிக்குஞ்சு
நாம் வளர்ந்து அனுபவம் பெற்ற பெரியவர்கள் ஆகும்வரை பெரியவர்களின் சொற்படியே நடக்கவேண்டும்;அவர்களின் அரவணைப்பிலேயே வளரவேண்டும் என்பது இக்கதை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
டான்டூனின் கேமரா
புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.
யாம் சில அரிசி வேண்டினோம்
வானொலியில் அழகிய பெரியவன் பேட்டி ஒன்று கேட்டு அவரின் நூல்களைப் படிக்க ஆர்வம் வந்தது. நூலுக்கு முன்னுரை திருவள்ளுவர், ஆம் உலகப் பொதுமறையிலிருந்து கதைக்குப்பொருத்தமான ஒருகுறளை இணைத்திருப்பது இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பு.
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .
கணினியும் கதையெழுதும்!
உலகெங்கும் விஞ்ஞான வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. விஞ்ஞான வாரத்தை ஒட்டி இக்கட்டுரையை இன்று எழுதினேன். விஞ்ஞானமும் கற்பனையும் சந்திக்கு மையம் பற்றிய கட்டுரை.
புறா சொல்லும் பாடம்
ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு பறவையான புறா கற்றுத்தரும் பாடம். நல்லனவற்றை யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமல்லவா!
வெண்ணிற நினைவுகள்(vennira ninaivugal)
"தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு பலவிதமான பலகாரம் சிறுவர்களுக்கு பட்டாசு இளவயதினருக்கு புத்தாடை எல்லாவயதினருக்கும் எண்ணெய் குளியல். வரும் தலைமுறையில் பள்ளியில் தீபாவளி கட்டுரையில் பலகாரம், பட்டாசு, புத்தாடை, எண்ணெய் குளியலோடு, திரைப்படம் பார்ப்பது ஐதீகம் என்று சேர்த்து எழுதும் அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்ட திரைப்படம் பற்றியதானது எனது இந்தப் பதிவு."
வெற்றிடம்
ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்.....
தரங்கம்பாடி கோட்டை(Fort Dansborg)
"டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ' ஹேம்லெட் ' நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த 'க்ரோன்போர்க்' கோட்டையாகும்.
தண்ணீர்
"தண்ணீர் (பம்ப்)அடிக்கும் நேரத்தில் 'பகவானே வந்தாலும் இப்படி கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கள்' என்று சொல்வோம்.."
‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’
"முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது."
காமிக்ஸ் பிறந்த கதை
"காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின. இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை வெளியிட்டு லாபம் தேடிக்கொண்டார். "
கூரை
"தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது."
வசந்தகால மேகம்
"வாழ்க்கையில் நடந்து போனதை நினைத்து வேதனைப்பட வேண்டும் என்றிருந்தால் நமக்கு கண்கள் முதுகிலிருக்க வேண்டும்.."
சந்தோசம்
"அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான்."
படகோட்டியின் பயணம் பகுதி .2
"ஒருமுறை தேசாய்க்கு ஒருவர் விளையாடுவதற்கு பார்சலில் பொம்மைகளை வாங்கி அனுப்புகிறார். அவை வெளிநாட்டு பொம்மைகளாக இருப்பதால் கொடுக்காமல் காந்தி அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். இதுதேசாய்க்கு தெரியவர..."
அவள் மனம்
"அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது". குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது."
படகோட்டியின் பயணம் பகுதி. 1
"இன்னும் ஒருமுறை ஏறத் தொடங்கி விட்டது எறும்பு, ஒன்றுமே சொல்லவில்லை மரம்"
குற்றால அருவி
"இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம் காட்டிடும் போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது."
பாடுக பாட்டே
"இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய தமிழாசிரியருக்கு, உயர்தனிச் செம்மொழி என ஊட்டி வளர்த்த தந்தைக்கு (அவரும்ஆசிரியர்), தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்த அண்ணனுக்கும்(ஆசிரியர்) ஆசிரியர் தினத்தில் இந்த பதிவை சமர்பித்து வணங்குகிறேன்!"
காதல் அழிவதில்லை(கானல்)
"என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.."
எங்கள் ரகுநாதன்(engal ragunathan)
"பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க அதற்கு ரகுநாதனின் பதில் புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை."
வாழ்க்கை அழைக்கிறது (Vazhkai Azhaikkirathu)
"தாய்மாமன் தன்னை தாரமாக்க நினைக்க, தங்கம் தனக்கு பிடித்தவனுடன் ஓடிவர, அவனோ அவளை விட்டு ஓடிவிடுகிறான். அவள் சத்திரத்திற்கு...."
கிடா
"யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்"
ராஜ ஜாதகக்காரன்
" தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு" .
ஆதித்த கரிகாலன் மரண மர்மம்.(Chola Dynasty Prince Adhiththa Karikalan’s Mysterious Murder)
"விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் , கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்..."
என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு
கண்களைத் தூக்கம் .வ...ரு...ட விடாப்பிடியாக கடைசிவரியைப் படிக்கவும் திடுக்கிட்டு நாம் படித்த கதைதானா, தூக்க கலக்கத்தில் பக்கத்தை மாற்றினோமா, வரிகளை வார்த்தைகளை விட்டுவிட்டோமா, என...
தீவுக்கோட்டை (DEVI COTTAH )
"இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது..."
மணிமொழி நீ என்னை மறந்துவிடு
"சக பயணியாக கைக்குழந்தையுடன் இருக்கும்பெண் தன் பெயரை மணிமொழி என்று சொல்ல கதைநாயகி மணிமொழியைப் போல நாமும் விழிகள் விரிய..."
பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார்
அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. அவரது கல்வி, சமூக அவமானங்களை கடந்து, அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். இந்த புத்தகம் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கிறது.
ஹிட்லர்
வீரனாக இல்லாது நரிபோன்று தந்திரமாகவே செயல்பட்டு இலட்சக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தவன். வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயரெடுத்தவனின் எந்தச் செயலை ரசிக்க முடியும்.
படிப்பது சுகமே
எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம் போன்றவற்றில் மனதை செல்லவிடும் மனிதன் தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது. உடலையும் மனதையும் ஒருசேர செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே.
ஆளண்டாப் பட்சி
எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை படித்தபின்பே மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் ஆசிரியரின் முன்னுரையால் ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ....
அக்னிச் சிறகுகள்
திரு ஏ.பி.ஜெ. அப்துல்கலம், இந்தியாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானியாக, தனது சுயசரிதையில் தனது வாழ்க்கை மற்றும் சாதனைகளை விவரிக்கின்றார். பெற்றோரின் வாழ்வியல், நண்பர்களின் உதவிகள், தோல்விகளை எதிர்கொண்டு வெற்றிக்கு அணுகுமுறைகளை வகுப்பது போன்ற அனுபவங்களில் கல்வி மற்றும் நம்பிக்கையின் விருதுகளை அடைகிறார்.
தளபதி
ஆசிரியர் எண்டமூரி வீரேந்திநாத் அவர்களின் கிரவுஞ்ச வதம் நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அந்த காதல் நாவல் எழுதியவரா என்பதாகவும் நாவலா ?.அல்லது திரைப்படமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒருஅதிரடித் திரைப்படம் பார்ப்பது போல நாவலை வடிமைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
முல்லா கதைகள்
முல்லா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. முல்லா, புகழ்பெற்ற வாத்களுக்காக செல்வாக்குள்ளவர், ஏற்படும் சிக்கல்களில் புத்திசாலித்தனம் காட்டுகிறான். இந்த கதைகள் விவகாரங்களை நகைச்சுவையுடன் விவாதிக்கின்றன, மகிழ்ச்சி தருகின்றன, மற்றும் முல்லாவின் அறிவை பற்றிய பல்வேறு காட்சிகளை வழங்குகின்றன.
நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்
ஆசிரியர் விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை. அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.
அழகின் ஆராதனை
ஆசிரியை லெஷ்மி அவர்களின் கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் பற்றியே அமைந்திருக்கும்.பூக்கள் அ த்தனையுமே அழகுதான் இருப்பினும் சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது. பூக்களின் ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும் வெறுப்பதுமில்லை.
திருக்குறள்
இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த திருக்குறளையே முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல் என்ற பொருளிலேயே நேரடியாக நாம் வழக்கமாகப் யன்படுத்துகிறோம். வேதத்தின் பொருளை அனைவராலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள முடியாது.
பங்குச்சந்தை அனாலிஸிஸ்
இன்றைய வேகமான உலகில் பணம் பணம் என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில் மூன்றே நிமிடத்தில் பல வேலைகள் செய்து பணக்காரனாக ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில் முடியாதென்பதை உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு இது சாத்தியமாகலாம்.
இலக்கியம்
உலகின் பல பகுதிகளில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்த கொண்டிருக்க , நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கிய வளமும் பெற்று திகழ்ந்தது நம் தமிழ் சமூகம்.
நெஞ்சின் அலைகள்
அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர். ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும் ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில் நூலகத்திலிருந்து என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில் நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.
சேரமான் காதலி
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள் அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் கவிஞரின் பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும் அவை வாடாத பூக்களாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.
தொல்காப்பியப் பூங்கா
ஆசிரியரைப்பற்றி ஒரேவரியில் சொல்வதானால் இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பார்கள் அதுபோல முத்தமிழறிஞர் என்ற அவருடைய பெயரே அவரின் சிறப்பை சொல்லி நிற்கிறது.
தம்பையா பிள்ளை
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில் மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.
இறையன்புவின் சிந்தனை வானம்
பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள விளக்கங்கள் ,கருத்துகளும் சிறப்பாக உள்ளன. முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு இந்த புத்தகத்தை படிப்பது சிறப்பாக உதவும்.
மீண்டும் ஜீனோ
முதல் பதிப்பு1986.என்னிடம் இருப்பது 8-ஆம்பதிப்பு 2014. பத்து வருடங்கள் கடந்த நிலையில் இப்போது இ்ன்னும் எத்தனைபதிப்பு வந்துள்ளதோ தெரியவில்லை. இயந்திரமனிதன் (ரோபோட்) மெல்ல மெல்ல மருத்துவம், விளையாட்டு, உணவகம் என உள்நுழைந்து கொண்டிருக்க, அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பமாக (சாட்Gஜிபிடி) செயற்கை நுண்ணறிவு . வருங்காலத்தில் மக்கள் இயந்திரமாக செயற்கை முறையில் மாற்றப்பட்டு, கருத்து சுதந்திரம் தடுக்கப்பட்டு , அடிமைகளாக ஆளப்பட்டு, இயந்திரங்களே ஆளும் நிலைவந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததன் விளைவே இந்தக் கதை. ஒருமாற்றமாக திரைப்படம் போல் இந்த விமர்சனத்தை பார்ப்போமே!
ஏழாம் சுவை
வாசித்தது:ஏழாம் சுவைஆசிரியர்:மருத்தவர் கு.சிவராமன்பக்கங்கள்:104பதிப்பகம்: விகடன் பிரசுரம்விலை: 80ரூபாய்வகை: மருத்துவக் கட்டுரைகள் மருத்துவர் சிவராமனைப் பற்றி தனியே சொல்லத்தேவையில்லை.பராம்பரிய உணவுகளுக்குத் திரும்பச் சொல்லும் அவரின் ஏதாவது ஒரு பேச்சையாவது நாம் நிச்சயம் கேட்டிருப்போம். ஒருசிலர் அதனை செயல்படுத்தியும் இருப்போம்.இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையின் தலைப்பு 'வாதம், பித்தம் கபம்- திரிதோட உணவு'.நம் உடலில் அடிப்படையாக உள்ளவை பற்றியது.புத்தகத்தின் கடைசித் தலைப்பு 'காதல் தரும் உணவு'. நம் மனதோடு தொடர்புடையது.உடலும் மனமும் ஒருங்கே ஒழுங்காக அமைந்துவிட்டால் வியாதி விடையாற்றிச் சென்றுவிடும்.உடல்... Continue Reading →
நெஞ்சே எழு
ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைப்பருவ கதைகேட்கும், படிக்கும் பருவத்தில் நிச்சயம் ஆரம்ப வாசிப்பாக சித்திரக்கதைகள் படித்து மகிழ்ந்திருப்போம். ஒற்றைக்கை மாயாவி கதை படிக்காத குழந்தைப் பருவம் இருக்க முடியுமா?.
வானம்பாடிக்கு ஒரு விலங்கு
குடும்ப நாவல்கள் எழுதுவதில் லஷ்மி தனித்துவம் பெற்றவர். குடும்பத்தின் ஆணிவேரான பெண்ணுக்கு குடும்ப உறவுகளே கொடுக்கும் குடைச்சல்கள் அதை ஒட்டிய பெண்ணின் போராட்டங்கள், அதிலிருந்து விடுபட உதவும் சில நல்ல இதயங்கள் இதை அடிப்படையாக வைக்கப்பட்ட கதைகள்.
சீனிவாச ராமானுஜம் (Srinivasa Ramanujan)
அகராதியில் சீனிவாச ராமானுஜம் = கணிதம் என்றே பொருள் கொள்ளக்கூடிய அளவுக்கு அவரின் கணித அறிவு திறமை. அறிவியல் கண்டுபிடிப்புகள் கருவிகள் கருத்துகள் மாறிக்கொண்டே ( இருக்கும்) இருக்கிறது. இன்றளவும் அவரின் கணக்கு குறியீடுகள் பின்பற்றப்படுவதும், அவர் விட்டுச் சென்ற கணித தீர்வுகளுக்கு வழி தேடுவது இன்றும் தொடர்கிறதெனில் அவரின் கணித அறிவை எந்த கணித குறீயீட்டால் அளப்பது?
சந்திரகாந்தா
க.நா.சு, இலக்கிய சிந்தனையாளர்கள் என்ற புத்தகத்தில் ரங்கராஜு பற்றி , (1920 களில்) ஒருதமிழ் வாசகப் பரம்பரையை உருவாக்க முயன்ற இருவருள் ஜே.ஆர்.ரங்கராஜூவையும் வடுவூர் துரைசாமி ஐயங்காரையும் சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார்.
நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்
புலவர் உலகநாதர் இயற்றிய 'உலகநீதி' யில் இரண்டாவது செய்யுளில் உள்ள மூன்றாவது நீதி: "நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்"
சுந்தர காண்டம்
மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்...
வெண்ணிற இரவுகள்
"வெண்ணிற இரவுகள் " முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.
புத்தி வந்தது
'உலகநீதி' செய்யளின் நாண்காவது வரி: 'வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்' இதை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்'
சுவீகாரம்
மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில் ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.